Pages

Sunday, July 23, 2023

புனைகதையுருவாக்கம்

முதலில் காட்சியுரு செய்த ஒன்றை மொழியின் வடிவில் பார்ப்பது ஒருவகைப்பாடு. 

மொழியை மட்டுமே பிரக்ஞையாக வைத்து எழுதுவது மற்றொரு வகை.

சொல்ல வந்ததை சாதாரண மொழிக்குள் வைத்துவிட்டு ஆங்காங்கே அசாத்திய தருணங்கள் தன்னியல்பாக உருவாகி வருவது இன்னுமொரு வகை.

புதுமையான சொல்முறை உத்தியில் கதைகளாக்குவது, தன்னனுபவ கதைசொல்லல், மேட்டிமை வெளிப்பாட்டு புனைவெழுத்து, வாசிப்பின் தாக்கங்களில் பிரதிபலித்தலாக அல்லாமல் முழுமையாகவே போலச்செய்தல் முறை, நூலாக்க/ எழுத்தாள பிம்ப ஏக்கத்தோடு ஆர்வமிகுதியில் எழுதப்படும் படைப்பு என அனைத்து சிந்தனை நோக்கோடு எழுதப்படும் படைப்புகளும் மேற்கூறிய ஏதேனுமொரு கூறுமுறையைப் பின்பற்றி படைக்கப்படும். இதில் சில விடுபடல்களும் இருக்கலாம்.

நவீன தமிழ் இலக்கிய உலகில் பல படைப்புகளும் வாசிக்கப்படாமல் தாமதமாக கவனம் பெறுவதும், எழுதப்பட்ட ஆரம்ப நிலையிலேயே பரவலாக கவனம் பெற வைக்க அனைத்து முயற்சிகளும் நடைபெறுவதுமாக இருவகை வாசிப்பியல்புகள் உள்ளன.

முழுமுற்றாக எழுத்தாளரின் எழுத்து நேர்மையால் உந்தப்பட்டு தீவிரமான கலையாக்கத்தைக் கொண்டாடுவதும், நட்புவட்ட எழுத்தின் மீது விமர்சனமற்ற பார்வையோடு அணுகுவதும், போற்றுதல் மூலம் தன்னெழுத்தை முன்னிறுத்த முனைவதுமாக படைப்பைக் கொண்டு சேர்ப்பதில் பலவகைகள்..



No comments:

Post a Comment