Pages

Wednesday, July 19, 2023

யதார்த்தவாத கதையாடல்

புனைகதைகளை மாய யதார்த்தவாத,  பின்நவீனத்துவ கோட்பாடுகளாக அதன் பின்னணியிலிருந்து உரையாடல்களை விரிவாக்குவது ஒருபுறமிருக்க அதே படைப்புகளை யதார்த்த பரிமாணங்களுக்குள் கொண்டு வருவதும் பிழையல்ல. பா.வெங்கடேசனின் கதைத்தொகுப்புகள் கோட்பாட்டுவாதங்களுக்குள் விமர்சகனை எளிதாக சிக்க வைப்பதை அங்கொன்று இங்கொன்றாக எழுதப்படும் கட்டுரைகளின் மூலம் கிடைத்தாலும் படைப்புக்குள் நேராக, சூட்சும லாவகத்தோடு எழுதப்பட்டு வாசிக்கப்படும் யதார்த்தங்களை வாசிப்பின்போதே பிடிபட நேர்வதும், உருவாகிக்கொண்டிருக்கும் தருணங்களும் ஏராளமானது. பாகீரதியை அவரது உறவினர் வசைபாடி வீட்டிற்குள் சேர்க்காமல் துரத்திவிடுவார். உறங்காப்புளியோடு வெளியேறும் பாகீரதிக்கு வேறொரு காலத்தில் கனவுகளுக்குள் யதார்த்தம் படிந்து ஒருவித எதிரியக்கத்தை ஏற்படுத்திவிடும். பௌதீக இன்மையும் பாகீரதியின் இருப்பும் ஒரே யதார்த்த உலகில் நிகழும் இருவேறு மாயங்களாக இல்லாமல் காலப்பின்னியக்கமாகவும் வரலாற்றை நிகழ்த்திக்கொண்டிக்கும் தற்தருண யதார்த்தப் பிரக்ஞைக்குள் உலவும் மனிதர்களின் பிறழ்பட்ட நிகழ்வுகளாகவும் மாறிவிடுகிறது.
இங்கு மனிதர்கள் பிறழ்வதில்லை, அவர்களுடைய யதார்த்தங்கள் சிக்கலாகி பிறழ்ந்துவிடுகிறது. கனவாக ஒன்றை அனுபவிப்பவர்  முரண்களையே  யதாத்தங்களின் பெருமகிழ்ச்சியாக்கி ரசிக்கிறார். 


No comments:

Post a Comment