Pages

Sunday, October 9, 2016

வல்லாங்கின் தீர்க்கமான சி்ல
கணங்கள் 
கூர்மையின் நிழல் 
வட்டமிடுவதை 
ஓங்காரம் செய்தன
பெரியகாட்டு இசக்கியோ
பார்வையற்றவள்
பதிமதியாள்
பல் உடல்காரி
நரநாக்கின் ஆவேச மூர்க்கம்
வெயிலாய் கொதிக்கையில்
மூச்சடையாமல் கொலைபோல
போகிக்கின்றான்
சம்போகம் 
நீட்சியின் நித்திய சூட்சுமம்
செயலாய் இருந்ததன்
முந்தைய
கணத்தில்
தன் பாகத்தின் ஸ்தூல சரீரம்
ரத்தமாகிப் பிளந்து கிடந்ததை
இசக்கியின் மருண்ட முகத்தில்
பூசிய 
வியர்வையில் கண்டான்

வீசியது ரத்த வாடை

No comments:

Post a Comment