Pages

Wednesday, November 30, 2016

சப்தங்கள்
மௌனத்தை அமௌனமாக்குகின்றன

சப்தங்கள்
அமௌனத்தை மௌனமாக்குகின்றன

****

நாட்களின் முடிவை
மரம் பிளக்கும் இடியோடு
முடித்தான்
ஒலியெழுப்பும் பலூன்களை
விற்பவன்

****

நீங்கள்
அவள்
அவள் வயிற்றிலிருக்கும் குழந்தை
நான்
நாமடங்கிய கிராமம்
கிராமங்களைப் போர்த்தியிருக்கும்
நகரம்
நகரங்களின் மேலுள்ள நாடு
பல நாடுகளைக் கொண்ட உலகம்
பல உலகங்களைக் கொண்ட பால் வெளி
பற்பல பால்வெளியை மூடியிருக்கும் பேரண்டம்
பேரண்டங்களைப் பற்றியிருக்கும் பிரபஞ்சம்
பிரபஞ்சம் போல் மற்றெல்லா பெரும் பெரும்
பிரபஞ்சங்களும்
பூசைச்சிறுமணியொன்றின் ஒலித்துணுக்கில்

அழியும்

(இக்கவிதை Kaul - என்ற மராத்தி படத்தின் விளைவாக)

No comments:

Post a Comment