Pages

Tuesday, December 6, 2016

காற்றலையும்
பறவைகள்  ஈக்களென
நெளிந்து
இன்மையின் பிரதியை
வெண்படலக் கித்தானில்
ஓவியமாக்கின

அதன் விரிசல் கோடுகள்
உன்மத்தத்தின் பிடி தாங்கியவை
எட்டவியலாத காண்பதற்கரிய
தொலைவில்
தீட்டப்பட்டவை
வெளியில்
மிதக்கும்
அரூபக்குழைவு 

ஓவியத்தின் நீளும் உருவம்
மின்னலைக்குள்
பாய்ந்து நிலத்தில் விழும் காக்கையைக் கண்டது போல
மூதாதை மரத்தின்
இலைக்கூட்டங்களைப் 
பதற வைக்கிறது

ஆதி காலத்தின் சுழற்சியான 
அரூப ஓவியத்தில்
எங்கோ ஓரிடம்
கான்கிரீட் கோபுரத்தின்
அஸ்திவார நிழலின் பிசுபிசுப்பு
கருமையாய் படிவதைக் கண்ணுற்ற
வௌவால் குஞ்சு தன்
உடலைச் சிலுப்பி
இரவின் குருதியை எரியும் சிதை மேல்
பீய்ச்சி அடித்தது.

No comments:

Post a Comment