Pages

Friday, February 10, 2017

எப்பொழுதும் போல
விடியவில்லை நேற்றைய
காலை
காகங்கள் கும்பலாக
கரைந்து
சூழ
வெட்டு ஓடுகளினின்று
ஊசிகளாய் இறங்கிய
மங்கலான வெளிச்சம்
துடைப்பமிடா அலைந்தோடும்
புள்ளித் துகள்களுள்
படரத் துடித்தன
அழைப்பு மணியின்
பித்தானுக்கு சுவர்க்கோழி
பதில் சொன்னது
இராசி பலன் சொல்லிகள்
தேவையற்றுப் போனார்கள்
நீண்டு வந்த இரயில்
வண்டியின் குரல் அடங்கிப்போயிருக்க
காலையில் அபூர்வமாய்
வரவுற்ற
பிச்சைக்காரன் மட்டும்
நிரந்தரமாக வீட்டுக்குள் தங்கிவிட்டான்
சிறுவர்கள்  கூட்டமாக முற்றத்திலிட்ட கோலத்தின் மேல்
பீய்ச்சி அடித்த
பெருநீரின் நாற்றம்
அகாலத்தின் கனவொன்றில்
வந்து போனது
என் நம்பிக்கை சரிதான் அங்கு
அவள் கோலமிழந்த காட்சியில்
ஒரு நடிகையைப் போலவே
இல்லை வழக்கம் போல்
இவன் விரல்கள் சூப்பிக்கொண்டு
தவழ்ந்துகொண்டிருந்தான்
புனித சிலுவை அணிந்து
கண்ணாடிப் பெட்டிக்குள் வாழும்
என் கண்களில் இலை முனை வழி சொட்டும் நீரென விழ ஆரம்பித்த
நேரத்தில்
பிச்சைக்காரன் கையளித்து
என்னை
அழைத்துச் செல்கிறான்
மீள இயலா கனவொன்றிற்கு

No comments:

Post a Comment